
புதுடெல்லி: அமெரிக்கா அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு விநியோகம் செய்ய உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு 22 அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்கா மற்றும் போயிங் நிறுவனத்துடன் இந்திய விமானப் படை ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டுக்குள் 22 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா விநியோகம் செய்தது. அதன்பின்னர் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் முதல் முறையாக பதவியேற்ற பின்னர் அதே ஆண்டின் பிற்பகுதியில் மேலும் 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வாங்க 600 மில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்காவுடன் இந்திய விமானப் படை ஒப்பந்தம் செய்தது.