
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் வலியுறுத்தி உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.
அதன் பின்னர், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீரில் அமைதி திரும்பிய பின் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது.