
தருமபுரி: “மதிமுகவை கருவியாக பயன்படுத்தி, என் மூச்சிருக்கும் வரை தமிழகத்துக்காக பாடுபட்டுக்கொண்டே இருப்பேன்” என்று தருமபுரியில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ உருக்கமாக பேசினார்.
தருமபுரியில் மதிமுகவின் வேலூர் மண்டல செயல் வீரர்கள் கூட்டம் இன்று (ஜூலை 17) பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று பேசியது: “சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் காலத்தில் கல்லூரி விழாவில் மேடையில் நான் பேசியதை பார்த்த காமராஜர், என்னை காங்கிரஸ் கட்சிக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்துவிட்டேன்.