
மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மேயரையும் விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பாக மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், துணையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக சார்பில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.