
திண்டிவனம்: விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெறும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று (ஜூலை 17) அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் மழை பொழிவு அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. தமிழக நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் குறுக்கே உள்ள ஷட்டர் உள்ளிட்டவை பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் மழை பொழியும்போது பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும். தென்பெண்ணையாறு, தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இதே நிலை உள்ளது. 36 மாவட்டங்களில் உள்ள 149 பாசன கட்டமைப்பை மறுசீரமைக்க, நீர்வளத் துறைக்கு ரூ.1,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்.