
ஒருபக்கம் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, தமிழகத்தில் ‘2026-ல் கூட்டணி ஆட்சிதான்’ என தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், இப்போது திமுக கூட்டணியிலும் ‘ஆட்சியில் பங்கு’ என்னும் பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறது காங்கிரஸ்.
தமிழகத்தில் சமீபத்தில் ‘கூட்டணி ஆட்சி’ முழக்கத்தை பேசுபொருளாக்கியது விசிகதான். விசிகவின் சில தலைவர்கள் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என முதன்முதலாக அனலை மூட்டினர். விசிக உருவாக்கிய முழக்கத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட விஜய், தவெகவின் முதல் மாநில மாநாட்டில் ‘கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்போம்’ என்று அறிவித்தார்.