
புதுடெல்லி: திருப்பதி நரசிம்ம முராரி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டதிட்டங்கள் முஸ்லிம் சமூகத்தின் நலனை மட்டுமே ஆதரிக்கிறது.
இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படையான மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது. எனவே அக்கட்சியின் பதிவை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.