
மேலக்கோட்டையூர்: தமிழியக்கம் மற்றும் மறைமலை அடிகள் கல்வி அறக்கட்டளை சார்பில், மறைமலை அடிகள் 150-வது பிறந்த நாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா, வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள விஐடி சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு, தமிழியக்கத்தின் தலைவரும் விஐடி வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
விழாவில், மறைமலை அடிகளார் பேரன் மறை தி.தாயுமானவன் தயாரித்த மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு என்ற தலைப்பிலான நூலை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட, ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ பெற்றுக் கொண்டார்.