• July 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வேளாண் மற்​றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி மேம்​பாட்டு திட்​டங்​களில் ரூ.50,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய மத்திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது. மத்​திய அமைச்​சரவை கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் நேற்று நடை​பெற்றது.

இதில் பிரதமரின் தன் தானிய வேளாண் திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டம் அடை​யாளம் காணப்​படும் 100 மாவட்​டங்​களில், நடப்பு நிதி​யாண்டு முதல் 6 ஆண்டு காலத்​திற்கு செயல்​படுத்​தப்​படும். வேளாண் துறை​யிலும் அது சார்ந்த துறை​களி​லும் விரை​வான வளர்ச்​சியை எட்​டு​வது தொடர்​பாக இத்​திட்​டம் கவனம் செலுத்​தும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *