
திருச்சி: நாம் தமிழர் கட்சி சார்பில் ஆக.17-ம் தேதி மரங்களின் மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். 2018-ல் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி கோபிநாத் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சீமான் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: விவசாயிகள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜக அரசின் கொள்கைகளில் இருந்து, திமுக அரசு எவ்விதத்திலும் மாறுபடவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்கலாமா? மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்குபெறும் திமுக, மாநிலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதில்லை.