• July 17, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழக வெற்​றிக் கழகத்​தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரை மாவட்​டம் பாரப்பத்​தி​யில் நடத்​து​வதற்​கான ஏற்​பாடு​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மதுரை – தூத்​துக்குடி தேசிய நெடுஞ்​சாலையில் பாரப்பத்தி பகு​தி​யில் 506 ஏக்​கர் திடலில் ஆக. 25-ம் தேதி தவெக மாநாடு நடை​பெற உள்​ளது. இதற்​கான பந்​தல்​கால் நடும் விழா நேற்று காலை நடந்​தது.

கட்​சி​யின் மாநிலப் பொதுச் செய​லா​ளர் ஆனந்த் தலை​மை​யில், சிறப்பு பூஜைகளு​டன் பந்​தல்​கால் நடப்​பட்​டது. மதுரை மாவட்​டச் செய​லா​ளர்​கள் கல்​லாணை என்ற விஜயன்​பன், தங்​கப்​பாண்டி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர். பின்​னர், ஆனந்த் தலை​மையி​லான கட்சி நிர்​வாகி​கள், மதுரை மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கம் சென்​று, மாநாடு நடத்த அனு​மதி கோரி எஸ்​.பி. அரவிந்​திடம் மனு அளித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *