• July 17, 2025
  • NewsEditor
  • 0

மக்களைத் தேடி கழகத்தினரைப் போகச் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம், கட்சிக்கும் ஆட்சிக்கும் தொல்லையாக இருக்கும் நிர்வாகிகளை களையெடுக்கும் வேலைகளையும் வேகப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படித்தான் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மாநிலங்களவை எம்பி-யான கல்யாணசுந்தரத்தை கழற்றிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அண்​மைக்​கால​மாக பொது இடங்​களில், ‘பொன்​முடி ஸ்டைலில்’ எடக்கு மடக்​காக பேசி எரிச்​சலை உண்​டாக்​கி​னார் பெரிய​வர் கல்​யாணசுந்​தரம். இது சமூக ஊடகங்​களில் வைரலாகி சர்ச்​சை​யான நிலை​யில், கல்​யாணசுந்​தரத்​தால் அழுத்​திவைக்​கப்​பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட திமுக நிர்​வாகி​கள் சிலர் அண்​மை​யில் அறி​வால​யத்​துக்கே சென்று கல்​யாணசுந்​தரம் மற்​றும் ஒன்​றியச் செய​லா​ள​ராக இருக்​கும் அவரது மகன் முத்​துச்​செல்​வத்​துக்கு எதி​ராக தங்​களது மனக்​கு​முறலைக் கொட்​டி​விட்டு வந்​த​தாகச் சொல்​கி​றார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *