• July 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திரு​வள்​ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்​பட்​டது குறித்து ரயில் ஓட்​டுநர், நிலைய அதி​காரி உட்பட 16 பேரிடம் சென்னை ரயில்வே கோட்ட அலு​வல​கத்​தில் நேற்று விசா​ரணை தொடங்​கியது. திரு​வள்​ளூர் ரயில் நிலை​யம் அருகே பெட்​ரோல், டீசல் நிரப்​பிக் கொண்டு 52 பெட்​டிகளு​டன் சென்ற சரக்கு ரயில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அதி​காலை தடம்​புரண்டு விபத்​துக்​குள்​ளானது.

இதனால் பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டு, அடுத்​தடுத்து 18 டேங்​கர்​கள் எரிந்து நாச​மாகின. இதனால் சென்னை சென்ட்​ரல் – அரக்​கோணம் மார்க்​கத்​தில் ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது. சேதமடைந்த ரயில் தண்​ட​வாளம், உயர்​நிலை மின்​பாதை, மின்​கம்​பங்​கள் ஆகியவை அடுத்த 2 நாட்​களில் முழு​மை​யாக சீரமைக்​கப்​பட்​டன. இந்த ​பாதைகளில் மின்​சார, விரைவு ரயில்​கள் தற்​போது வழக்​கம்​போல இயங்​கு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *