• July 17, 2025
  • NewsEditor
  • 0

திருச்சியில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய மத்திய பேருந்து நிலையம் 53 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் வெளியூர் போக்குவரத்து சேவையை நிறுத்திக்கொள்கிறது.

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் பிரதான அடையாளமாக திகழ்ந்தது மத்திய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்துக்கு, சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து நாள்தோறும் 1,516 புறநகர் பேருந்துகள் 2,893 முறை வந்து சென்றன. இப்பேருந்து நிலையத்தில் இருந்து 750 மீ. தொலைவில் திருச்சி ரயில்வே சந்திப்பும், 5 கி.மீ. தொலைவில் திருச்சி சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது சிறப்புக்குரியது. இதனால், 24 மணிநேரமும் பரபரப்பாக இயங்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் நாள்தோறும் ஒரு லட்சம் பயணிகளை கையாண்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *