
கடலூர்: “அதிமுக அரசு அமைந்தவுடன் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக செயல்படுத்துவோம்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சிதம்பரம் தனியார் ஓட்டலில் இன்று (ஜூலை 16) காலை 12 மணி அளவில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் பகுதி விவசாயிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசி, கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பல்வேறு இன்னல்களையும் பட்டியலிட்டனர்.