
சென்னை: சட்டவிரோத மணல் விற்பனையால் அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிண்டியில் உள்ள சுரங்கத்துறை இயக்குநரிடம் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், கரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சட்ட விரோத குவாரிகள் செயல்படுகின்றன.