
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் இந்த கோரிக்கை சட்டப்பூர்வமானது. அதோடு, இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவர்களின் உறுதியைக் காட்டுகிறது.