
சென்னை: திருக்குறளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலப்படம் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 'தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு கடந்த ஜூலை 13-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப்பரிசு வழங்கினார். திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.