• July 16, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: நெல்லை- மதுரை, மதுரை- நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் பைபாஸ் ரைடர்களை பயணிகள் சிறுநீர் கழிப்பதற்காக உரிய இடத்தில் பத்து நிமிடம் நிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நெல்லை மாவட்டம் பொது ஜன பொது நல சங்கத் தலைவர் முகமது அயூப், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லையிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து நெல்லைக்கும் தினமும் பைபாஸ் ரைடர் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை- மதுரை மூன்றரை மணி நேர பயண தூரத்தின் போது பைபாஸ் ரைடர் பேருந்துகள் இடையில் எங்கும் நிறுத்தப்படுவதில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *