• July 16, 2025
  • NewsEditor
  • 0

ராஞ்சி: ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் இன்று (ஜூலை 16) காலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகளும், ஒரு சிஆர்பிஎப் வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பொகாரோ மாவட்டத்தில் கோமியா காவல் நிலையப் பகுதியில் உள்ள பிர்ஹோர்டெரா காட்டில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த என்கவுன்டரின் போது பாதுகாப்புப் படையினர் இரண்டு மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றனர். சிஆர்பிஎப் கோப்ரா பட்டாலியனை சேர்ந்த ஒரு வீரர் இந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார் என்று பொகாரோ மண்டலம் ஐஜி கிராந்தி குமார் காடிதேசி தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *