
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, திமுக செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் தலைமையில் சென்னை கே.கே.நகரில் நடைபெற்றது. இதில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பங்கேற்று, பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் மட்டுமே அதிகம் படித்தவர்கள் கேள்வி கேட்கின்றனர். அவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் முயற்சி நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இந்தி திணிப்பு அதன்பின் நீட்தேர்வு. இந்தி படிக்காவிட்டால் கல்விக்கான நிதியை தரமாட்டோம் என்று மத்திய பாஜக அரசு கூறுகிறது.