
விஜயவாடா: ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்தியது. அப்போது, ஜெகன் கட்சியை சேர்ந்த சிலரின் மது தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலமாக தரம் குறைந்த மதுபானங்களை மார்க்கெட்டில் விற்றது. இதனால் பலரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஜெகன் ஆட்சியில் அரசுக்கு ரூ.3,500 கோடி வரை மது விற்பனையால் நஷ்டம் ஏற்பட்டது சிறப்பு விசாரணை குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்பேரில் இதுவரை பலரை இக்குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.