
பாட்னா: பிஹாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் விளைவாக 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்க உள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: பிஹார் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 6.6 கோடி வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.