• July 16, 2025
  • NewsEditor
  • 0

பெரம்பலூர்: கண்ணில் பார்க்க முடியாத காற்றில்கூட ஊழல் செய்த கட்சி திமுக என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியது: இந்த 50 மாத கால திமுக ஆட்சியில் இந்தப் பகுதிக்கு இந்தத் தொகுதியின் அமைச்சர் ஏதாவது ஒரு பெரிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளாரா? தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் ஆக அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 50 நாட்களாக குறைத்துவிட்டார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *