
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் அதிநவீன ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கடந்த 10-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பின்னர், சென்னையில் இருந்து தைலாபுரத்துக்கு கடந்த 12-ம் தேதிசென்ற தனியார் துப்பறியும் குழுவினர் 3 மணி நேரம் ஆய்வு செய்தனர். அக்குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் கூடுதல் எஸ்.பி. தினகரனிடம் பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில், “தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் சட்ட விரோதமாக அதிநவீன ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. நிறுவனர் ராமதாஸ் இருக்கையில் இல்லாதபோது அதைப் பொருத்தியுள்ளனர்.