• July 16, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள தனது வீட்​டில் அதிநவீன ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​தாக கடந்த 10-ம் தேதி பாமக நிறுவனர் ராம​தாஸ் கூறி​னார். பின்​னர், சென்​னை​யில் இருந்து தைலாபுரத்​துக்கு கடந்த 12-ம் தேதிசென்ற தனி​யார் துப்​பறி​யும் குழு​வினர் 3 மணி நேரம் ஆய்வு செய்​தனர். அக்​குழு வழங்​கும் அறிக்​கை​யின் அடிப்​படை​யில், அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என ராம​தாஸ் குறிப்​பிட்​டிருந்தார்.

இந்​நிலை​யில், விழுப்​புரம் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் உள்ள சைபர் க்ரைம் பிரி​வில் கூடு​தல் எஸ்​.பி. தினகரனிடம் பாமக தலைமை நிலை​யச் செய​லா​ளர் அன்​பழகன் நேற்று புகார் மனு அளித்​துள்​ளார். அதில், “தைலாபுரத்​தில் உள்ள ராம​தாஸ் வீட்​டில் சட்ட விரோதமாக அதிநவீன ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டுள்ளது. நிறு​வனர் ராம​தாஸ் இருக்​கை​யில் இல்​லாத​போது அதைப் பொருத்​தி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *