
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு அஜித் பவார் தலைமையிலான என்சிபி-யின் தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல் கடிதம் அனுப்பியுள்ளார்.
கேரள மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் மற்றும் கேரள மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் தாமஸ் கே.தாமஸ் ஆகிய இரண்டு என்சிபி எம்எல்ஏக்கள் தற்போது சரத் பவார் தலைமையிலான கட்சியில் செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கட்சி இப்போது கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் அங்கம் வகித்து வருகிறது.