
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை இரண்டு வாய்ப்புகளை மட்டுமே யோசித்து வைத்திருந்தார். அதாவது, இபிஎஸ் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதிமுகவில் இணைவது அல்லது தனிக்கட்சி தொடங்கி தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணிப்பது ஆகிய இரண்டும்தான். இப்போது மூன்றாவது வாய்ப்பாக விஜய் கூட்டணி ஆப்ஷனையும் திறந்துள்ளார் ஓபிஎஸ்.
2021 முதல் பல்வேறு பிரளயங்களை சந்தித்து இப்போது கடைசி கட்டத்தில் வந்து நிற்கிறார் ஓபிஎஸ். அதிமுகவில் இருந்து ஒரங்கட்டப்பட்டது முதல், கட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாஜக முழுமையாக கைவிட்டது வரை தொடர்ந்து இறங்குமுகத்தையே சந்தித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.