
கடலூர்: ‘குறிஞ்சிப்பாடி அருகில் கொடுக்கன்பாளையத்தில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 12,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திலுள்ள லால்புரத்தில் எல்.இளையபெருமாளின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.