
சென்னை: வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, “மோகன் ராஜ் அண்ணன் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான மோகன் ராஜை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள், குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.