
வேலூர்: ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. அதிகாரிகள் சரியாக இருந்தால்தான் தீர்வு கிடைக்கும்” என்று காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆதங்கத்துடன் பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் தொடக்கவிழா காட்பாடி செங்குட்டையில் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, "பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக அளிக்கும் மனுக்களுக்கு சாக்கு, போக்கு சொல்லாமல் உடனடியாக நிவர்த்தி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.