
சென்னை: நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், மாநில சமரச தீர்வு மையம் சார்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரச்சார விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சமரச தீர்வு மையம் செயல்படுகிறது.
உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை வீண் தாமதம், வீண் செலவுகள் இல்லாமல் சுமுகமாக தீர்க்க இந்த மையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.