
புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மற்றும் நவம்பர் ஆகிய 3 மாதங்களில் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு நவம்பருக்குள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
அந்தப் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.தேவகவுடா ஆகியோரும் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி முடிவடைகிறது. உ.பி. சார்பில் அதிகபட்சமாக 10 எம்.பி.க்கள் அடுத்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெறுகின்றனர்.