
சென்னை: பணி நிரந்தரம் கோரி 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் டிபிஐ வளாகம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது.