
புதுடெல்லி: ‘‘கணவன் – மனைவிக்குள் நடைபெற்ற உரையாடல்களை, ரகசியமாக பதிவு செய்திருந்தால் அவற்றை ஆதாரமாக பயன்படுத்தலாம்’’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா குடும்பநல நீதிமன்றத்தில் திருமணம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனைவி தன்னை சித்ரவதை செய்வதாக கணவன் குற்றம் சாட்டினார். அதற்கு ஆதாரமாக தொலைபேசியில் மனைவி பேசிய அனைத்தையும் ரகசியமாக பதிவு செய்து அதை டிஸ்க்கில் பதிவேற்றம் செய்து சமர்ப்பித்தார். அந்த தொலைபேசி உரையாடல்களை குடும்பநல நீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுக் கொண்டது.