
திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே உள்ள இசுகபல்லி எனும் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல தோட்டங்களில் தொழிலாளர்கள் மாங்காய் அறுவடையில் ஈடுபட்டனர். ஷெட்டிகுண்டா ரயில்வே காலனி, பத்தவேடு, கல்வகுண்டா ஆகிய கிராமங்களை சேர்ந்த இவர்கள் 21 பேரும் காலை முதல் மாலை வரை மாங்காய்களை அறுத்து பிறகு லாரியில் ஏற்றினர். பிறகு அதே லாரியில் தங்கள் ஊருக்குப் புறப்பட்டனர்.
அந்த லாரி ரயில்வே கோடூரு மாங்காய் சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புல்லம்பேடு ரெட்டிசெருவு எனும் இடத்தில் ஏரிக்கரை மீது அந்த லாரி செல்லும்போது திடீரென நிலைதடுமாறி ஏரியில் கவிழ்ந்தது.