• July 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சேலத்துக்கு புதிய காவல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவு: சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய ஐஜியாக இருந்த மகேந்தர் குமார் ரத்தோட், டிஜிபி அலுவலக தலைமையிடத்து ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி அனில் குமார் கிரி, சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள் ளார். சென்னை பெருநகர காவல் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் தர்மராஜன், வேலூர் சரக டிஐஜியாக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *