• July 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்தை சிதம்​பரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் இன்று தொடங்கி வைக்​கிறார். தமிழக அரசின் செய்தி தொடர்​பாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்ள வரு​வாய் துறை செயலர் அமு​தா, இத்​திட்​டம் குறித்து செய்​தியாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: முதல்​வர் தனி பிரி​வில் (‘சிஎம் செல்’) பெறப்​படும் மனுக்​கள், அவரது பயணத்​தின்​போது மக்​கள் தரும் மனுக்​கள், அழைப்பு மையத்​தில் பெறப்​படும் கோரிக்​கைகள் ஆகிய​வற்றை ஒருங்​கிணைத்து தீர்வு காணும் நோக்​கில் ‘முதல்​வரின் முகவரி துறை’ கடந்த 2021 நவம்​பரில் தொடங்​கப்​பட்​டது.

அதன்​கீழ், கடந்த 4 ஆண்​டு​களில் 1.05 கோடி மனுக்​கள் பெறப்​பட்​டு, கடந்த ஜூன் 30 வரை 1.01 கோடி மனுக்​களுக்கு தீர்வு காணப்பட்​டுள்​ளது. கடந்த 2023-ல் ‘மக்​களு​டன் முதல்​வர்’ திட்​டத்​தில் நகர பகு​தி​களில் 9.05 லட்​சம் மனுக்​கள் பெறப்​பட்டு தீர்வு காணப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *