
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மதுக்கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு, கடந்த ஏப்ரல் முதல் தலா, ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதம் கடந்தும், சட்டப்பேரவையில் அறிவித்தப்படி ஊதிய உயர்வை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.