
மதுரை: லட்சக்கணக்கான மக்கள் திரண்ட மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் மாநகராட்சி சார்பில் இரவு, பகலாக குப்பைகள் அகற்றும் பணி கடந்த 10-ம் தேதி முதல் 24 மணி நேரமும் நடந்து வருகிறது.
மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான நேற்று நள்ளிரவு வரை முகாமிட்டும், இன்று அதிகாலை 4 மணிக்கு சென்றும் கோயில் பகுதிகளில் சுகாதாரப் பணிகள், குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.