• July 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள விவகாரத்தில் அரசு இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

கேரள நர்ஸ் நிமிஷாவின் கழுத்துக்கு தூக்குக் கயிறு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவரைக் காப்பாற்ற மத்திய அரசின் தலையீட்டைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று ஆஜரான அட்டர்னி ஜெனரல் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த ‘கைவிரிப்பு’, நிமிஷா தண்டனை நிறைவேற்றத்தை ஏறக்குறைய உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *