• July 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஹரியானா, கோவா ஆகிய மாநிலங்களுக்கான ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹரியானா மாநில ஆளுநராக அஷிம் குமார் கோஷ், கோவா மாநில ஆளுநராக பசுபதி அஷோக் கஜபதி ராஜு ஆகியோர் நியமிக்கப்பட்டுளளனர். லடாக் துணைநிலை ஆளுநர் பிரிகேடியர் பி.டி. மிஸ்ராவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. லடாக்கின் புதிய துணைநிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட நியமனங்கள், அவர்கள் பொறுப்பேற்கும் தேதிகளில் இருந்து நடைமுறைக்கு வரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *