
புது டெல்லி: டெல்லியில் ‘தீஜ் மேளா’ எனும் பெயரில் பெண்களுக்கான பிரம்மாண்டமான திருவிழா நடைபெறுகிறது. ஜுலை 25 முதல் 27 வரை நடைபெறும் இந்த விழாவை முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைக்கிறார்.
பெண்களுக்கான அதிகாரம், கலாச்சார வளம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் டெல்லி அரசு, தேசிய தலைநகரில் ஒரு பிரமாண்டமான தீஜ் மேளாவை ஏற்பாடு செய்கிறது.