• July 14, 2025
  • NewsEditor
  • 0

இந்தூர்: மத்திய பிரதேசம், இந்தூரின் கவுரி நகரை சேர்ந்தவர் சதீஷ் சவுகான் (30). இவர் ஹெல்மெட்டில் அதிநவீன கேமராவை பொருத்தி உள்ளார். வீட்டில் இருந்தாலும், வெளியே இருசக்கர வாகனத்தில் சென்றாலும் ஹெல்மெட் கேமராவுடன் அவர் வலம் வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருக்கிறது. அவர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது வீட்டின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினேன். ஆனால் அந்த கேமராக்களை அண்டை வீட்டுக்காரர்கள் உடைத்துவிட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *