
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது, எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள முக்கிய தீவிரவாத முகாம்களை அழித்தது.