
பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கங்கிபாடுவை சேர்ந்தவர், கோட்டா சீனிவாச ராவ். வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த அவர், நாடகங்களிலும் நடித்து வந்தார். 1978-ம் ஆண்டு ‘பிராணம் கரீடு’ என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அங்கு ஏராளமான படங்களில் வில்லன், குணசித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள அவரை இயக்குநர் ஹரி, விக்ரம் நடித்த ‘சாமி’ படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்தார். அதில் அவருடைய 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது.