
நாமக்கல்: பழநி மலையில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைப் பகுதியில் மத்திய புவியியல் துறை மூலம் மாலிப்டினம் உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாலிப்டினம் சுரங்கம் தோண்டி எடுத்தால் பழநி மலைப் பகுதிகள் அனைத்தும் அழிந்து போகும்.