• July 14, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர்/ சென்னை: சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. இதில், 18 டேங்​கர்​கள் எரிந்து நாச​மாகின. இந்த விபத்தால், விரைவு ரயில், புறநகர் மின்​சார ரயில் சேவை கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது.

சென்னை துறை​முகத்​தில் இருந்து 2 இன்​ஜின்​கள் கொண்ட சரக்கு ரயில், நேற்று அதி​காலை 3 மணி அளவில் வாலாஜா சைடிங் நிலை​யத்​துக்கு புறப்​பட்​டது. தலா 70 ஆயிரம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட 45 டேங்கர்​களில் டீசலும், 5 டேங்கர்​களில் பெட்​ரோலும் நிரப்​பப்​பட்​டிருந்​தது. நேற்று அதி​காலை 4.55 மணி அளவில் திரு​வள்​ளூர் ரயில் நிலை​யத்தை கடந்து சென்​ற​போது, 2 இன்​ஜின்​கள், ஒரு டேங்கர் ஆகியவை திடீரென தனி​யாக பிரிந்​த​தாக கூறப்​படு​கிறது. இதனால், ரயில் நிலை தடு​மாறி, 18 டேங்கர்​கள் அடுத்​தடுத்து தடம்​புரண்​டன. பெட்​ரோல், டீசல் நிரப்​பிய டேங்கர்​கள் ஒன்​றோடு ஒன்று மோதி​ய​தில் திடீரென தீப்​பற்​றிக்​கொண்​டது. மளமளவென மற்ற டேங்கர்​களுக்​கும் தீ பரவிய​தில், டேங்கர்​கள் வெடித்து சிதறின. இதனால், பல அடி உயரத்​துக்கு நெருப்பு கொழுந்​து​விட்டு எரிந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *