
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில், சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.
நாட்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கையை மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு வெளியிட்டது. இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (‘கும்டா’) கடந்த 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. எனினும், 2021-ம் ஆண்டுக்கு பிறகே, தனியான நிர்வாக அமைப்புடன் இந்த அமைப்பு செயல்பட தொடங்கியது.