
புதுடெல்லி: மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேச எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய 12 எம்.பி.க்களை மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் குடியரசு தலைவர் நியமிக்கிறார். இலக்கியம், அறிவியல், சமூக சேவை,பொது வாழ்க்கை என பல துறைகளில் நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருபவர்கள் எம்.பி.க்களாக நியமிக்கப்படுகின்றனர்.