
தகுதி, திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டே இருந்தால் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் தானாகவே வந்து சேரும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கே.அண்ணாமலை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை உத்தண்டியில் இந்து பவுன்டேசன் எனும் அமைப்பு சார்பில் சுத்தானந்தா ஆசிரமத்தில் தலைமைத்துவம், அரசியல் மற்றும் ஆளுமை தொடர்பாக இரண்டு நாள் பயிலரங்கம் நேற்று தொடங்கியது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலத் தலைவருமான கே.அண்ணாமலை, தேசிய மாநில செயலாளர், ஆந்திர பிரதேச மாநிலத்தின் பார்வையாளர் சுனில் தியோதர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். 70 பேர் பங்கேற்றுள்ள இப்பயிலரங்கு இன்றுடன் நிறைவு பெறுகிறது.